UNDP பணியாளர்களால் முன்னனி சுகாதார ஊழியர்களுக்கு 600 PPE Kits அன்பளிப்பு

UNDP பணியாளர்களால் முன்னனி சுகாதார ஊழியர்களுக்கு 600 PPE Kits அன்பளிப்பு

கொரோனா வைரஸிற்கு எதிராக போராட்டத்தில் முன்னனியில் பணியாற்றும் சுகாதார நிபுணர்களுக்கும் பணியாளர்களுக்கும் உதவும் வகையில் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பணியாளர்களினால் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE Kits) அண்மையில் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இவற்றில், 500 PPE உபகரணங்கள் மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுலகத்திற்கும், 100 PPE உபகரணங்கள் களுத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கும் UNDP பணியாளர்கள் அளித்த தன்னார்வ பங்களிப்புகளின் மூலமும் வழங்கப்பட்டது.

COVID-19 தொற்றுநோயைத் தடுப்பதில் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.