புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குணப்படுத்தும் தோட்டம் திறப்பு
ஜப்பானின் “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான "SUWA ARANA" நோய்த் தடுப்பு பராமரிப்பு நிலையத்தின் குணப்படுத்தும் தோட்டம் அண்மையில் திறந்துவைக்கப்பட்டது.
சர்வதேச குழந்தைப் பருவ புற்று நோய் தினமான பெப்ரவரி 15ஆம் திகதி ,லங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டாவினால் இந்த தோட்டம் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டது.
இந்த குணப்படுத்தல் தோட்டத்தின் முக்கியத்துவத்தினை "SUWA ARANA" நிலையத்தினை இயக்கும் இந்திரா புற்று நோய் அறக்கட்டளையின் தலைவர் லங்கா ஜெயசூரிய திசாநாயக்க இந்த நிகழ்வில் எடுத்துரைத்தார்.
புற்று நோய் - மனம், உடல் மற்றும் ஆவியை பாதிக்கின்றது என்பதையும் அவர் வலியுறுத்தினார். இதனால், குணப்படுத்தும் தோட்டம் நோயாளிக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஆறுதல், புதுப்பித்தல் மற்றும் வலிமையினை கண்டறிய அமைதியான இடத்தினை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் கவலைகளை தணிப்பதற்கும் அவர்கள் மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் வாழக்கூடிய சூழலை உருவாக்கவும் இந்த திட்டம் பங்களிப்புச் செய்துள்ளது என ஜப்பானிய தூதுவர் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.
ஜப்பானிய குழந்தைகளின் நல்வாழ்வு மையங்களுடன் எதிர்கால பரிமாற்றங்கள் மூலம் நோய்த் தடுப்பு பராமரிப்பு மேலும் ஊக்குவிக்கப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)