பாகிஸ்தானிற்கும் விஜயம் மேற்கொள்ளுமாறு மஹிந்தவிற்கு அழைப்பு விடுத்த இம்ரான்

பாகிஸ்தானிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்தார்.

பௌத்த சமயத்துடன் தொடர்புடைய புராதான இடங்கள் பல உள்ளதாகவும் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

பாகிஸ்தான் இம்ரான் கானிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான இராஜதந்திர சந்திப்பு அலரி மாளிகையில் இன்று (23) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பாகிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.