பலவந்த தகனத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

பலவந்த தகனத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களை பலவந்தமாக தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (23) செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இலங்கைக்கு வருவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், மனோ கணேசன் மற்றும் எஸ். ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.