சவூதி - இலங்கை இடையேயான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு பூர்த்தி விழா

சவூதி - இலங்கை இடையேயான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு பூர்த்தி விழா

சவூதி அரேபியா மற்றும் இலங்கை குடியரசுக்கு ஆகியவற்றுக்கு இடையேயான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கத்தானியின் தலைமையில் உத்தியோகபூர்வ நிகழ்வொன்று அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்களும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா, ஏனைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் உட்பட இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ஊடகத் துறை முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.