கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து உமாசந்திர பிரகாஷ் நீக்கம்

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து உமாசந்திர பிரகாஷ் நீக்கம்

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து திருமதி உமாசந்திர பிரகாஷ், நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கொழும்பு மாநகர சபையின் தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.எஸ்.சேனாரத்னவினால் கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இவர் செயற்பட்டார்.

இந்த நிலையில் சஜித் பிரேமதாச தலைமயிலான ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட வேட்பாளராக பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளார். இதனால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் உறுப்பினர் பதிவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த பதவி இழப்பின் காரணமாக கொழும்பு மாநகர சபையின்  உறுப்பினர் பதவியை அவர் இழந்துள்ளாரென கொழும்பு மாநகர சபையின் தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.