முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல்

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக மற்றுமொரு மனு தாக்கல்

கொவிட் 19 நோய் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக இன்று (12) செவ்வாய்க்கிழமை மற்றுமொரு மனுவொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பள்ளிவாசல் சம்மேனத்தின் செயலாளரான ஏ.எச்.எம்.நசார் என்பவரினால் இந்த மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஏ.சீ.எம்.பெனாசீரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவின் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜயசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.