SJBஇன் பொத்துவில் தொகுதி இளைஞர் அமைப்பாளராக கபூர் நிப்றாஸ் நியமனம்

SJBஇன் பொத்துவில் தொகுதி இளைஞர் அமைப்பாளராக கபூர் நிப்றாஸ் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி இளைஞர் அமைப்பாளராகவும், இளைஞர் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் ஊடகவியலாளர் கபூர் நிப்றாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (08) திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இவருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்பாளருமான மயந்த திஸ்ஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.

பாஸ் லங்கா செய்தி இணையத்தின் பிரதானியாகவும் அரச அனுமதி பெற்ற கட்டிட பட வரைஞருமான இவர், இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மாணவருமாவார்.

கட்சியின் வளர்ச்சிக்காகவும் தலைவருடைய திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் கடந்த காலங்களில் விசுவாசமாக ஒத்துழைப்பு வழங்கியமையினை கௌரவித்தே இந்த பதவி இவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.