ஜும்ஆ தொழுகையினை பள்ளியில் மேற்கொள்ள சவூதியில் அனுமதி

ஜும்ஆ தொழுகையினை பள்ளியில் மேற்கொள்ள சவூதியில் அனுமதி

சவூதி அரேபியாவில் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகையினை மாத்திரம் பள்ளிவாசலில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தொழுகைக்கு 20 நிமிடங்களிற்கு முன்னர் பள்ளிவாசலை திறந்து தொழுகை நிறைவடைந்து 20 நிமிடங்களில் பள்ளிவாசலை மூட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலினை அடுத்தே அங்கு பள்ளிவாசல்கள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் உம்ரா மற்றும் ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்கான தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.