மன்னிப்புக் கோரியது சம்பத் வங்கி

சம்பத் வங்கியின் தெஹிவளை கிளையில் நேற்று (02) வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த வங்கியின் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

இது தொடர்பில் சம்பத் வங்கியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண் வாடிக்கையாளர் ஒருவர் சம்பத் வங்கியின் தெஹிவளை கிளைக்கு சென்ற போது தலையிலுள்ள பர்தாவினை கழற்றி அடையாளத்தினை காண்பித்த பின்னர் உள்ளே வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான வீடியோ காட்சியொன்று சமூக ஊடகங்களில் நேற்று வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்தே குறித்த சம்வத்துடன் தொடர்புடைய தரப்பினருக்கு மனமார்ந்த வருத்தத்தினை தெரிவிப்பதாக சம்பத் வங்கி அறிவித்தது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக வங்கி உரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளது.