றிசாத் பதியுதீனை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்

றிசாத் பதியுதீனை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்

நீதிமன்றத்தின் பிடியாணையினை பெற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை கைது செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு இந்த அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை வாக்களிப்பதற்காக பஸ்ஸில் ஏற்றிச் சென்றதிற்கமைய தேர்தல் சட்டத்தினை மீறியமை மற்றும் பொது நிதியினை முறைகேடாக பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் பிடியாணையினை பெறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.