'தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டில் றிசாத் கைது'

ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரிகளுக்கு உதவியளித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் கொழும்பு – 07 பௌத்தாலோக மாவத்தையிலும், அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் வெள்ளவத்தை பிரதேசத்திலும் வைத்து இன்று (24) சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் இருவரிடமும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.