தமிழ் முற்போக்கு முன்னணியிலிருந்து அரவிந்த குமார் இடைநிறுத்தம்

தமிழ் முற்போக்கு முன்னணியிலிருந்து அரவிந்த குமார் இடைநிறுத்தம்

பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை தமிழ் முற்போக்கு முன்னணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளேன் என அதன் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தீர்மானத்தினை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் நேற்று (22) வியாழக்கிழமை  ஆதரவளித்திருந்தார்.

இதனையடுத்தே குறித்த தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் முன்னணியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் விரிவாக அராய்ந்து முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் அரவிந்தகுமார் எம்.பி, கூட்டணியிலிருந்து விலக்கப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரவிந்தகுமார் தொடர்பான மேலதிக நடவடிக்கையை எடுக்குமாறு அவரது கட்சியான மலையக மக்கள் முன்னணியிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மனோ கணேசன் மேலும் கூறினார்.