மஜ்மா நகரில் 1,001 பேர் நல்லடக்கம்

 மஜ்மா நகரில் 1,001 பேர் நல்லடக்கம்

கொவிட் - 19 காரணமாக உயிரிழப்பவர்களை நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி, மஜ்மா நகரில் நேற்று (14) புதன்கிழமை வரை 1,001 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலான தெரிவித்தார்.

இதில் 946 முஸ்லிம்களும், 24 இந்துக்களும், 16 கிறிஸ்தவர்களும், 15 பௌத்தர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் மாதம் முதல் இங்கு நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.  கடந்த நான்கரை மாத காலப் பகுதியில் 1,001 பேர் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.