CID அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது: ரவூப் ஹக்கீம்

CID அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது: ரவூப் ஹக்கீம்

CID என்று சுருக்கமாக அழைக்கப்படும் குற்றப் புலனாய்வு திணைக்களம், அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்திலுள்ளவர்களினால் வெறுக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆஜராகியமையே சட்டத்தரணி ஹிஜாஸ் செய்த பாவமாகும் என அவர் கூறினார்.

"இந்த விடயம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அணுகூமுறை ஏமாற்றமளிப்பதாக" சட்டத்தரணியான ரவூப் ஹக்கீம் குறித்த டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.