அடுத்த வாரம் கல்முனை பிராந்தியத்திற்கு 50,000 சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை

அடுத்த வாரம் கல்முனை பிராந்தியத்திற்கு 50,000 சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை

அடுத்த வாரம் கல்முனை பிராந்தியத்திற்கு 50,000 சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த உறுதிமொழி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலேச குணவர்;த்தனவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்தியத்திற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலேச குணவர்த்தன தலைமையிலான சுகாதார அமைச்சின் உயர் மட்டக் குழுவொன்று விஜயம் செய்தது.

இதன்போதே இந்த உறுதிமொழி வழக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் முஹம்மத் தௌபீக் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் ஜீ. சுகுணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.