ஹரின் பெர்ணான்டோவிற்கு நாளை 8 மணி நேர சத்திர சிகிச்சை

 ஹரின் பெர்ணான்டோவிற்கு நாளை 8 மணி நேர சத்திர சிகிச்சை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவிற்கு நாளை (01) வெள்ளிக்கிழமை சுமார் 8 மணி நேர சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பில் அவர், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார். "நாளை ஒக்டோபர் முதலாம் திகதி. நான் தீர்மானமிக்க சத்திர சிகிச்சையொன்றை எதிர்கொள்ளவுள்ளேன்" என குறித்த பேஸ்புக் பதிவில் அவர் கூறியுள்ளார்.

கடந்த மே மாதம் முதலாம் திகதி இதே போன்று வாழ்க்கையில் தீர்மானமிக்க சோதனையொன்றை எதிர்நோக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருத சத்திர சிகிச்சையொன்றை எதிர்கொள்வதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.