20க்கு எதிராக சிவப்புப் பட்டி அணிந்த தௌபீக் வாக்களிப்பில் ஆதரவு

20க்கு எதிராக சிவப்புப் பட்டி அணிந்த தௌபீக் வாக்களிப்பில் ஆதரவு

20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் சிவப்புப் பட்டி அணிந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், குறித்த திருத்தச் சட்டத்திற்கான வாக்களிப்பில் ஆதரவளித்திருந்தார்.

இந்த திருத்தச் சட்டத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் வாசிப்புக்களின் மீதான வாக்களிப்பு இன்று (22) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. இதன்போது இவர் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் மாத்திரம் எதிராக வாக்களித்தார்.