கொழும்பை வந்தடைந்தார் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர்

கொழும்பை வந்தடைந்தார் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர்

சில்மியா யூசுப்

பங்களாதேஷின் இலங்கைக்கான புதிய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள தாரிக் எம்.டி.அரிபுல் இஸ்லாம் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

கடந்த நவம்பர் 28ஆம் திகதி கொழும்பை வந்தடைந்த இவர் தற்போது தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சுய தனிமைப்படுத்தலிலுள்ள நிலயில், எதிர்வரும் 14ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாரிக் எம்.டி அரிபுல் இஸ்லாம், 1998 இல் பங்களாதேஷ் வெளியுறவு சேவையில் சேர்ந்தார். இதற்கு முன்னர்,  நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பங்களாதேஷின் வதிவிட அலுவலகத்தில் துணை நிரந்தர பிரதிநிதியாக கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020 ம் ஆண்டு வரை கடமையாற்றினார்.