வியாழக்கிழமை நோன்பு நோற்குமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

வியாழக்கிழமை நோன்பு நோற்குமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்கில் எதிர்வரும் வியாழக்கிழமை (19) இலங்கை முஸ்லிம்களை நோன்பு நோற்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்மைகய எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி வியாழக்கிழமை நோன்பு நேற்று கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அவசரமாக குணமடையவும், மேலும் இந்நோய் பரவமால் இருக்கவும் பிராத்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்தது.

ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட் கிழமைகளில் நோற்பது சுன்னத்தாகும். இதற்கமைய எதிர்வரும் வியாழக் கிழமை சகலரும் நோன்பு நோற்று துஆ, இஸ்திக்பார் போன்ற அமல்களில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டியுள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று (17) செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.