வியாழேந்திரனின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வியாழேந்திரனின் இல்லத்திற்கு முன்பாக  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

மட்டக்களப்பு, பிள்ளையாரடி பிரதேசத்திலுள்ள இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பு இன்று பி.ப 5.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் அதிவேகமாக பயணித்த டிப்பர் வாகனத்தின் சாரதிக்கும் இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு பாதுகாப்பு கடமையில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த குறித்த சாரதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.