இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவராக ஜஸ்வார் உமர் தெரிவு

இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவராக ஜஸ்வார் உமர் தெரிவு

இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் புதிய தலைவராக ஜஸ்வார் உமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று (30) புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, 96 வாக்குகளைப் பெற்று ஜஸ்வார் உமர், இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

இதேவேளை, குறித்த பதவிக்கு ஜஸ்வார் உமருடன் போட்டியிட்ட மனில் பெர்ணான்டோ 90 வாக்குகளை மாத்திரமே பெற்றார்.

இதற்கு முன்னர் இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, செயலாளர் ஆகிய பதவிகளை கடந்த ஐந்து வருடங்களாக ஜஸ்வார் உமர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.