கல்முனை மாநகர சபை உறுப்பினராக மௌபியா நியமனம்

கல்முனை மாநகர சபை உறுப்பினராக மௌபியா நியமனம்

கல்முனை மாநகர சபை உறுப்பினராக சாய்ந்தமருதினைச் சேர்ந்த சாலின் மௌபியா நியமிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட அலுவலகம் தெரிவித்தது.

சுயேட்சைக் குழு – 04 இன் சிபாரிசிற்கமைய குறித்த நபரின் பெயரை வர்;த்தமானியில் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.

இந்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்பட்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு – 4 ஒன்பது ஆசனங்களை கைப்பற்றியது.

இந்த சுயேட்சைக்குழுவின் உறுப்பினரான முஹர்ரம் பஸ்மீர், கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதிக் காலப் பகுதியில் தனது மாநகர சபை உறுப்பினர் பதவியினை இராஜினாமாச் செய்தார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடம் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக நீடித்து வந்தது. எனினும் குறித்த பதவிக்கு நியமிப்பதற்கு பலரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே சாலின் மௌபியாவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுயேட்சைக் குழு – 04 இனால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.