பந்து சமரசிங்க மிலானிற்கான துணைத் தூதுவராக நியமிக்கப்படவில்லை

பந்து சமரசிங்க மிலானிற்கான துணைத் தூதுவராக நியமிக்கப்படவில்லை

இத்தாலியின் மிலான் நகரிற்கான இலங்கையின் துணைத் தூதுவராக பந்து சமரசிங்க நியமிக்கப்படமாட்டார் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

குறித்த பதவிக்கு பந்து சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து குறித்த நியமனத்திற்கு எதிராக பாரிய விமர்சனமொன்று சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு விசேட அறிக்கையொன்றினை நேற்று (16) சனிக்கிழமை வெளியிட்டு குறித்த செய்தி போலியானது என்பதனை அறிவித்துள்ளது.