தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் முதலவாது கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு புதிய நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் அனைத்து உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களையும் அழைத்து தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகள், மாவட்ட ரீதியிலான கலந்துரையாடல்கள் மற்றும் மக்கள் சந்திப்புகள் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.