பாகிஸ்தான் - இலங்கை உறவினை குறிக்கும் வகையில் நினைவு முத்திரை வெளியீடு
பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் 75ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் நினைவு முத்திரைகளை கூட்டாக வெளியிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று அண்மையில் கையொழுத்திடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அஞ்சல் துறைக்கும் இலங்கை அஞ்சல் துறைக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பஹீம் உல் அஸீஸ் மற்றும் இலங்கை தபால் திணைக்கள தலைமை அஞ்சல் அதிகாரி எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி. சத்குமார ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இந்நிகழ்வு வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் நடைபெற்றது.
Comments (0)
Facebook Comments (0)