பேராயர் மல்கம் ரஞ்சித்தை சஜிதுடன் சந்தித்த ஹரீன்

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ இன்று (27) சனிக்கிழமை பேராயர் மல்கம் ரஞ்சித்தினை சந்தித்தார்.

கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சமகி ஜன பலகேய கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டார்.

பேராயர் மல்கம் ரஞ்சித் அரசியலில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார். எனினும் பின்னர் அவர் அதற்காக பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

இந்த நிலையிலேயே இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.