'அரச விடுமுறை என்பதில் எந்தவித உண்மையுமில்லை'

'அரச விடுமுறை என்பதில் எந்தவித உண்மையுமில்லை'

மூன்று நாட்களுக்கு அரச விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக சமூக ஊடங்களில் பரப்பப்டும் செய்தியில் எந்தவித உண்மையுமில்லை என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ தெரிவித்தார்.

சில சமூக ஊடகங்களில் அரச விடுமுறை அறிவிக்கப்படவுள்ளதாக உண்மைக்குப் புறம்பான செய்தி பரப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் நேற்று (11) சனிக்கிழமை எந்தவித தீர்மானமும் அரசாங்கத்தினால் எடுக்கவில்லை என்று அவர் மேலும் கூறினார்

"3 நாட்களுக்கு அரச விடுமுறை" என @helakuru செயலி ஒன்றின் மூலம் தவறுதலாக பழைய செய்தியொன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த செய்தியினை பலர் சமூக ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியொன்றினை நேற்றிரவு முதல்  உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.