ஈஸ்டர் தீவிரவாத தாக்குதலை இலகுவாக தடுத்திருக்க முடியும்: பிரதமர்

ஈஸ்டர் தீவிரவாத தாக்குதலை இலகுவாக தடுத்திருக்க முடியும்: பிரதமர்

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தீவிரவாத தாக்குதலை இலகுவாக தடுத்திருக்க முடியும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தாக்குதல் திகதி, இடங்கள், தீவிரவாதிகளின் பெயர்கள், முகவரி, அடையாள அட்டை இலக்கங்கள், தொலைபேசி இலக்கங்கள் கூட எமது நட்பு நாடொன்றின் உளவு பிரிவால் முன்கூட்டியே அப்போதைய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தன எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தீவிரவாத தாக்குதல் நடைபெற்று ஒரு வருட பூர்த்தி நாளை (21) செவ்வாய்க்கிழமை இடம்பெறுகின்றது. இந்த நிலையில் பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.