ஜுன் 20 இல் பாராளுமன்ற தேர்தல்

ஜுன் 20 இல் பாராளுமன்ற தேர்தல்

ஒத்திவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (20) திங்கட்கிழமை அறிவித்தது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று மாலை இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.