கோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் தெரிவு

கோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் தெரிவு

ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு எனப்படும் கோப் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கோப் குழுவின் முதலாவது கூட்டம் இன்று (22) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போதே இந்த தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.