அதாஉல்லாவின் ஆடையினால் சபையில் சர்ச்சை

தேசிய காங்கிரஸின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் ஆடையினால் இன்று (22) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பாரிய சர்ச்சை ஏற்பட்டது.

அத்துடன் அவர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா சபையிலிருந்து வெளியேறியதனை அடுத்தே எதிர்க்கட்சியினர் அமைதி காத்தமை குறிப்பிடத்தக்கது.