மௌலவி முர்சித் முழாபரிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவு

மௌலவி முர்சித் முழாபரிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதி பொதுச் செயலாளரான அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முர்சித் முழாபரிற்கு எதிராக மேன்முறையீட்டு  நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யுமாறு இன்று (10) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழு முன்னிலையில் பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று (09) சாட்சி வழங்கியிருந்தார்.

இதன்போது, தனது கையடக்கத் தொலைபேசியில் குறித்த சாட்சியத்தினை பதிவு செய்த அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முர்சித் முழாபர் மற்றும் அவரது சட்டத்தரணி ஆகியோருக்கு எதிராகவே மேன் முறையீட்டு  நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.