ஆயுர்வேத வைத்தியர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு

ஆயுர்வேத வைத்தியர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இந்த உபகரணங்கள் ஆயுர்வேத திணைக்களத்திடம் நேற்று (15) புதன்கிழமை கையளிக்கப்பட்டன.  

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அதன் தலைவர் மற்றும் ஆயுர்வேத ஆணையாளர் சதுர சேனாரத்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் பரவலினை கட்டுப்படுத்தும் பணியில் ஆயுவேர்த வைத்தியர்களும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.