செப்டெம்பர் 15 இற்கு பின்னர் கொவிட் தடுப்பூசி அட்டையின்றி பொது இடங்களுக்கு நுழைய தடை

செப்டெம்பர் 15 இற்கு பின்னர் கொவிட் தடுப்பூசி அட்டையின்றி பொது இடங்களுக்கு நுழைய தடை

எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் கொவிட் தடுப்பூசிகள் இரண்டும் பெற்ற அட்டையின்றி பொது இடங்களுக்கு நுழைய தடை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (13) வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
 
அத்துடன் இன்று நள்ளிரவு முதல், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக இடைநிறுத்தம் என அவர் குறிப்பிட்டார்.