மஜ்மா கிராமத்தில் இதுவரை 20 ஜனாஸாக்கள் அடக்கம்

மஜ்மா கிராமத்தில் இதுவரை 20 ஜனாஸாக்கள் அடக்கம்

-எஸ்.எம்.எம்.முர்ஷித்-

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த 20 ஜனாஸாக்கள் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வரை  ஓட்டமாவடி மஜ்மா கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

குறித்த கிராமத்தில் நேற்று (06) சனிக்கிழமை மாத்திரம் பதினொரு (11) ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்று மூலம் மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மற்றும் இன்று சனிக்கிழமை ஆகிய இரு தினங்களில் மாத்திரம் கொரோனாவினால் மரணித்தவர்களில் இருபது (20) ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று மூலம் மரணித்த ஜனாஸாக்களில் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த ஒன்பது ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று சனிக்கிழமை நிட்டம்புவ பிரதேசத்தினை சேர்ந்த நான்கு பேர், திஹாரி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர், நாரங்கொடயை சேர்ந்த ஒருவர், கொழும்பைச் சேர்ந்த ஒருவர், அக்குறனை மற்றும் அம்பத்தென் பகுதியை சேர்ந்த தலா ஒருவருமாக பதினொரு ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.