Wisdom at Our Doorstep எனும் நூல் நாளை வெளியீடு

Wisdom at Our Doorstep எனும் நூல் நாளை வெளியீடு

பிரித்தானியாவினை தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கை எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வருமான லுக்மான்ஹரீஸினால் எழுதிய Wisdom at Our Doorstep எனும் நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் திகதி சனிக்கிழமைபி.ப 4.00 மணிக்கு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

இந்துக் கல்லூரி அதிபர் பி. பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் நீதிக் கதைகளின் ஊடாகநல்லிணக்கம் (Harmony through Parables) எனும் தலைப்பில் கோட்டை வல்பொல ராகுல நிலையத்தின் தலைவர் கல்கந்தேதம்மானந்த தேரர் சிறப்புரையாற்றவுள்ளார்.

முன்னணி பத்திரிகைகளின் எழுத்தாளரான லுக்மான் ஹரீஸினால் இதுவரை எழுதியுள்ள நான்கு நூல்கள் பிரித்தானியாமற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

இவரின் ஐந்தாவது நூலான Wisdom at Our Doorstep, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினையும் ஒற்றுமையினையும்வலியுறுத்தியுள்ளது. இந்த நூல் Hameedia My Friend செயற்த்திட்டத்தினால் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.