இன்று திங்கட்கிழமை ஏழு கொவிட் ஜனாஸாக்கள் நல்லடக்கம்

இன்று திங்கட்கிழமை ஏழு கொவிட் ஜனாஸாக்கள் நல்லடக்கம்

-எஸ்.எம்.எம்.முர்ஷித்-  

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா கிராமத்தில் நான்காவது நாளாக இன்று (08) திங்கட்கிழமை பிற்பகல் 05 மணி வரை கொரோனா தொற்றால் மரணித்த ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தெரிவித்தார்.

ஆறு ஆண்களும், ஒரு பெண்னுமாக ஏழு ஜனாஸாக்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் பேலியாகொடை, மட்டக்குளி, மல்வானை, ஹுனுபிட்டி, குருணாகல் ஆகிய பிரதேசங்களில் இருந்து தலா ஒருவரது ஜனாஸாவும் திஹாரி பிரதேசத்தை சேர்ந்த இரண்டு ஜனாஸாக்களும் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதற்கமைய நான்கு தினங்களில் 31 ஜனாஸாக்கள் மஜ்மா கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.