இம்ரான் மஹ்ரூப் பிணையில் விடுதலை

இம்ரான் மஹ்ரூப் பிணையில் விடுதலை

ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், இன்று (21) திங்கட்கிழமை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கடந்த வாரம் கிண்ணியாவில் போராட்டமொன்றை இவர் நடத்தியிருந்தார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்து பொலிஸாரால் இவர் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய போது பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.