அக்கரைப்பற்று பிரதேச சபை நூலகங்களில் வீரகேசரி பத்திரிகைக்கு தடை

அக்கரைப்பற்று பிரதேச சபை நூலகங்களில் வீரகேசரி பத்திரிகைக்கு தடை

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பிரதேச சபையின் கீழுள்ள நூலகங்களுக்கு வீரகேசரி பத்திரிகையை கொள்வனவு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணையொன்று அக்கரைப்பற்று பிரதேச சபையில் நேற்று (03) வியாழக்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை சண்முகா பாடசாலையில் அபாயா அணிந்து வந்த ஆசிரியை பாடசாலை நிர்வாகத்தினர் தாக்கிய விடயத்தை திரிவுபடுத்தி வீரகேசரி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியினை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த செய்தியினை வன்மையாக கண்டித்து பத்திரிக்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் அக்கரைப்பற்று பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத் தீர்மானத்தின் முன்மொழிவை அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ எம் ஐய்யூபினால் முன்மொழியப்பட்டு சபையினால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.