கலைக்கப்பட்ட பாரளுமன்றம் மீண்டும் கூட்டப்படாது: ஜனாதிபதி

கலைக்கப்பட்ட பாரளுமன்றம் மீண்டும் கூட்டப்படாது: ஜனாதிபதி

கலைக்கப்பட்ட பாரளுமன்றத்தினை மீண்டும் கூட்டுவதற்கான வாயப்பில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) வியாழக்கிழமை அறிவித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையினை கருத்திற் கொண்டு பாராளுமன்றத்தினை கூட்டுமாறு எதிர்க்கட்சியிலுள்ள ஏழு கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக ஜனாதிபியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதற்கு பதில் வழங்கும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்துர, முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.