எதிர்க்கட்சிகளின் கோரிக்கையினை ஆதரிக்கிறேன்: கரு

எதிர்க்கட்சிகளின் கோரிக்கையினை ஆதரிக்கிறேன்: கரு

ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷவினல் கலைப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையினை ஆதரிப்பதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (30) வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந்த கோரிக்கை உரிய நேரத்தில், நல்லெண்ணத்துடன் கோரப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தின் சபாநாயகர் என்ற வகையில் இக்கோரிக்கையை ஆதரிக்கிறேன். பாராளுமன்றம் மீளக் கூட்டப்படுமாயின், அதன் சிறந்த செயற்பாட்டை உறுதிப்படுத்துவது சபாநாயகரின் பொறுப்பாகும் என கரு ஜயசூரிய மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தினை கூட்டுமாறு கோரி எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஏழு கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.