ஸம் ஸம் பவுண்டேஷனினால் இராணுவத்திற்கு உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு

ஸம் ஸம் பவுண்டேஷனினால் இராணுவத்திற்கு உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு

ஒரு மில்லியன் பெறுமதியான 150 உலர் உணவுப் பொதிகளை ஸம் ஸம் பவுண்டேஷனினால் இராணுவத்திற்கு அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்டது.

கொவிட் 19 தொற்றை தடுப்பதற்காக தமது உயிர்களை பணயம் வைத்து நாட்டின் அனைத்து இன மக்களின் தனித்துவத்தையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்தி, பாரிய சேவை புரியும் இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகமே இந்த உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பொதிகளை ஸம் ஸம் பவுண்டேஷனின் தலைவர் முப்தி யூஸுப் ஹனிபாவினால் இராணுவத் தளபதியும், கொவிட் 19 தடுப்பு தேசிய மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் இராணுவ தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூ;ர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.