இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான மீடியாகோர்ப்ஸ் நிகழ்ச்சித்திட்டம்

இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான மீடியாகோர்ப்ஸ் நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான MediaCorps நிகழ்ச்சித்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

சீதுவை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் றமதாவில் கடந்த செப்டம்பர் 11 தொடக்கம் 16 வரை இடம்பெற்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தில் நாட்டின் சகல பாகங்களிலும் இருந்து 25 இளம் ஊடகவியலாளர்கள் பங்குபற்றினர்.

இவர்களில் 12 சிங்கள, 6 தமிழ் மற்றும் 7 முஸ்லிம் ஊடகவியலாளர்கள். இவர்களில் ஆண்கள் 18 பேரும் பெண்கள் 7 பேரும் உள்ளடங்கியிருந்தனர். பல்வகைத்தன்மை, இன மற்றும் மொழிப் பின்புலங்களைக் கொண்ட இவ்வூடகவியலாளர்கள் அச்சு, இலத்திரனியல் மற்றும்  இணைய ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்திருந்தனர்.

இந்த ஊடகவியலாளர்கள் முன்னதாக நான்கு இணைய வழிக் கருத்தரங்குத்தொடர்களில் பங்குபற்றியிருந்தனர். இக்கருத்தரங்குத் தொடர்கள் (i) பல்வகைத்தன்மை மற்றும் பன்மைத்துவம் என்பவற்றின் மீதான கூருணர்திறன், (ii) முரண்பாடு உணர்திறன் மிக்க ஊடகவியல், (iii) பால்நிலை உணர்திறன் கொண்ட ஊடகவியல் மற்றும்  (iv) ஊடகவியலுக்கான சமூக ஊடகம் என்ற கருப்பொருட்களில் நடாத்தப்பட்டன.

ஊடகவியலாளர்கள் நேரடியாகக் கலந்துகொண்ட பயிற்சிநிகழ்ச்சித் திட்டத்துக்கு முன்னதாக நடத்தப்பட்ட இவ்விணையவழிக் கருத்தரங்குகள் குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்தவம் கொண்ட வாண்மையாளர் வரிசை ஒன்றினால் நடத்தப்பட்டமை ஒரு விசேட அம்சமாகும்.

அண்மையில் சீதுவை நகரில் ஊடகவியலாளர்கள் நேரடியாகக் கலந்துகொண்ட பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் SDJF அமைப்பின் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் முஹம்மட் அஸாடின் தலைமையில் நிகழ்ந்த சிறிய அங்குரார்ப்பண நிகழ்வொன்றுடன் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் உரையாற்றிய முஹம்மட் அஸாட், "மீடியாகோர்ப்ஸ் நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து கொள்ள நூற்றுக்கணக்காண இளம் ஊடகவியலாளர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் முதன்மையானவர்களையே நாம் இந்நிகழ்ச்சித் திட்டத்துக்காக தெரிவு செய்தோம்.

நீங்கள் உங்களின்ஊடகவியலாளர்கள் மற்றும் கதை சொல்பவர்கள் என்ற வகிபாகத்தின் ஊடாக இலங்கையின் சமாதானம் மற்றும்  சகவாழ்வை வலுப்படுத்துவதற்கு தலைமையேற்கும் சக்திகளில் ஒன்றாக செயற்படுவீர்கள் என நாம் நம்புகின்றோம்" எனத் தெரிவித்தார்.

அங்குரார்ப்பண நிகழ்வின் போது ஒவ்வொரு பின்தொடரல் நிலைமாணவரும் ஸ்மார்ட்போன் (கையடக்கத் தொலைபோசி) ஒன்று உள்ளடங்கிய MoJo (கையடக்கத் தொலைபேசி ஊடகவியல்) கருவித்தொகுதி ஒன்றைப் பெற்றுக்கொண்டனர்.

நடைமுறை கையடக்கத் தொலைபேசி ஊடகவியல் அம்சங்களில் பிரதான கவனம் கொண்டதாக அமைந்திருந்த இப்பயிற்சி நிகழ்வின் பயிற்றுனர்களாக கபில ராமநாயக்க, முஹம்மது அஸ்வர் மற்றும் றுவான் போகமுவ ஆகியோரால் நடத்தப்பட்டது.

கையடக்கத்தொலைபேசி ஊடகவியல் (MoJo) என்ற அம்சத்துக்கு மேலதிகமாக பின்தொடரல் மாணவர் நிலை ஊடகவியலாளர்கள் மனித விருப்பு மிக்க உயர் தரம் கொண்ட கையடக்கத் தொலைபேசிக் கதைகளை உருவாக்குவதற்கு அவசியமான ஊடகவியல் திறன்களையும் அதிக அளவில் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டனர்.

இதன் அடிப்படையில், பயிற்சி நிகழ்வில் நேர்காணல் உத்திகள், கேள்விகள் கேட்டல், தரவு ஊடகவியல், யதார்த்தங்களை சோதனையிடல்,சரிபார்த்தல் மற்றும் காட்சயூடான கதை சொல்லல் போன்ற விடயங்களில் அமர்வுகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இவ்விடயங்கள் பின்தொடரல் மாணவர் நிலை ஊடகவியலாளர்கள் யதார்த்தம் மிக்க மற்றும் சான்றுகளின் அடிப்படையில் அமைந்த காட்சிக் கதைகளை உருவாக்குவதை ஊக்குவித்தது.

பின்தொடரல் நிலை மாணவர்கள் தாம் பயிற்சியின் போது கற்றுக்கொண்ட கையடக்கத் தொலைபேசி ஊடகவியல் திறன்களை நடைமுறையில் பிரயோகிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

நீர்கொழும்புப் பிரதேசத்தின் மொரவல மற்றும்  துவபிட்டிபான பகுதிகளுக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்தொடரல் நிலை மாணவர்கள் அக்கரையோரப் பகுதிகளில் மீனவ சமூகத்தை பாதிக்கும் விடயங்கள் மற்றும்  நீர்கொழும்புக் கடற்கரையை பாதிக்கும் சூழல் பிரச்சினைகள் பற்றி கதைகளின்தேடலில் கதை வசனம் எழுதுதல், அடிப்படை காணொளிப் பதிவுகளை மேற்கொள்ளல், நேர்காணல் உத்திகள்  மற்றும் காணொளித் தொடரொன்றைப் படம் பிடித்தல் போன்ற விடயங்களில் அனுபவங்களைப் பெற்றுக் கொண்டனர்.

கள விஜயத்தைப் பூர்த்தி செய்து திரும்பிய ஊடகவியலாளர்கள் அவர்களின் கள ஆலோசகர்களின் ஆதரவு மற்றும் வழிகாட்டலில் 25 கையடக்கத் தொலைபேசிக் கதைகளை மட்டறுத்து பூர்த்தி செய்தனர்.

இவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசிக் கதைகள் அவற்றின் ஊடகவியல் நியமங்கள் மற்றும் காட்சித் தரம் என்பவற்றை காணொளிகளின் காட்சி அலகுகளை ஒன்றன் பின் ஒன்றாக மதிப்பிடும் வரன்முறைக்கு ஏற்ப கள ஆலோசகர்கள் மற்றும் இணைநிலையினரால் மதிப்பீடு செய்யப்பட்டன.

இந்த மீளாய்வின் அடிப்படையில் அருளானந்தம் டேவிட், கோசல குணவர்த்தன மற்றும் நகுலேஸ்வரன் புவிகரன் ஆகிய மீடியாகோர்ப்ஸ் பின்தொடரல் நிலை மாணவர்களால் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த மூன்று கையடக்கத் தொலைபேசிக்கதைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஏனைய பின் தொடரல் நிலை மாணவர்கள் தமது முதலாவது கையடக்கத் தொலைபேசிக் கதையை உருவாக்கியமைக்காக பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

மீடியாகோர்ப்ஸ் பின்தொடரல் மாணவர் நிலை நிகழ்ச்சித்திட்டமானது ஜனநாயக இலங்கைக்கான ஊடகவலுப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF), ஆய்வு மற்றும் பரிமாற்றங்களுக்கான சர்வதேசச் சபை (IREX) மற்றும் USAID நிறுவனம் என்பவை இணைந்து அமுல்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டமாகும்.

மூன்று வருடங்களாக அமுல்படுத்தப்பட்டு வரும் இந்த பின்தொடரல் மாணவர் நிலை நிகழ்ச்சித்திட்டத்தில் இது வரை ஆறு தொகுதியாக 133 இளம் ஊடகவியலாளர்கள் பயிற்றப்பட்டுள்ளனர். இவ்வூடகவியலாளர்கள் இதுவரை 300 இற்கும் மேற்பட்ட சுவாரசியம் மிக்க கையடக்கத் தொலைபேசி மற்றும் பல் ஊடகக் கதைகளைத் தயாரித்துள்ளனர்.

SDJF அமைப்பு எதிர்காலத்திலும் இதையொத்த நிகழ்ச்சித் திட்டங்களை நடத்த எண்ணியுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற www.ldjf.org என்ற இணையத்தளத்திற்கு பிரவேசியுங்கள்.