அசாத் சாலியின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ் குழு நியமனம்

அசாத் சாலியின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ் குழு நியமனம்

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட இந்த குழு விசாரணை மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.

நாட்டு சட்டத்தினை சவாலுக்குட்படுத்தும் வகையிலேயே அவரின் கருத்து காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.