SJB எம்.பிக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை

SJB எம்.பிக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை

20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த SJB எம்.பி டியானா கமகேவிற்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த அறிவிப்பினை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மதும பண்டார அறிவித்தார். 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது என SJB தீர்மானித்தது.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 20ஆவது திருத்தச் சட்டம் மீதான வாக்களிப்பின் போது ஆதரவாக இவர் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.