கொழும்பை வந்தடைந்தார் புதிய சீன தூதுவர்

கொழும்பை வந்தடைந்தார் புதிய சீன தூதுவர்

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ட்சீ சென்ஹொங்கின், இன்று (30) வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு வந்தடைந்தார்.

இவரை கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

இரண்டு வாரங்களுக்கான தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை நிறைவுசெய்த பின்னர் இவர் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பார் என சீன தூதுவராலயம் அறிவித்தது.

சீனாவின் சிரேஷ்ட இராஜதந்திரியான இவர், சர்வதேச கற்கைகளுக்கான சீன நிறுவனத்தின் முன்னாள் தலைவராவார்.