பாகிஸ்தானில் தங்கியிருந்த 113 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரல் (படங்கள்)

பாகிஸ்தானில் தங்கியிருந்த 113 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரல் (படங்கள்)

பாகிஸ்தான் லாகூர் மற்றும் கராச்சி ஆகிய நகரங்களில் தங்கியிருந்த 113 இலங்கை மாணவர்கள் இன்று (21) செவ்வாய்க்கிழமை மாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

கல்வி கற்கச் சென்ற இவர்கள், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அங்கு நிர்க்கதிக்குள்ளாகியிருந்தனர். இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய ஸ்ரீலங்கா ஏயார் லைன்ஸின் விசேட விமானம் பாகிஸ்தான் சென்று இவர்களை அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.