சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக அஜித் ரோஹன பதவியுயர்வு

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக அஜித் ரோஹன பதவியுயர்வு

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவியுர்வு பெற்றுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சிபாரிசுக்கு அமைய, பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன உத்தியோகபூர்வ அறிவிப்பினை இன்று (02) வெள்ளிக்கிழமை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஜுன் 30ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.