கொவிட் காரணமாக பொட்ட நௌபர் காலமானார்

 கொவிட் காரணமாக பொட்ட நௌபர் காலமானார்

பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவரான பொட்ட நௌபர் என்று அழைக்கப்படும் முஹம்மட் நியாஸ் நௌபர், கொவிட் காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

மரண தண்டை கைதியான இவர், கடந்த பல வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டியவினை கடந்த 2004ஆம் ஆண்டு சுட்டுக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பொட்ட நௌபரிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.